×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு..!

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்வு..!

Advertisement

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் பாராகல் என்ற இடத்தில் இருக்கும் ராணுவ முகாமில், 11-ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் "ஜெய்ஷ் - இ - முகமது" பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் நுழைந்தனர். 

அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், ராணுவ தரப்பில், தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் உட்பட நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்தவர்கள் உதம்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சத்பால் சிங் என்ற வீரர் நேற்று மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Jammu and kashmir #Army camp #suicide attack #Death toll rises
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story