மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் 1000-க்கும் கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு.!
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கிலும், உயி
கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி தினசரி பாதிப்பு லட்சக்கணக்கிலும், உயிரிழப்பு ஆயிரக்கணக்கிலும் இருந்துவந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், தற்போது கொரோனா 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 46148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 979 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 58,578 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 9 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது .
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362