×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிக்கு அடிமையான தந்தையின் செயலால் ஏற்பட்ட விபரீதம்... எட்டு வயது சிறுவன் பலியான பரிதாபம்.....!

குடிக்கு அடிமையான தந்தையின் செயலால் ஏற்பட்ட விபரீதம்... எட்டு வயது சிறுவன் பலியான பரிதாபம்.....!

Advertisement

கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும் மருந்தை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம், சித்தாப்புரா தாலுகா வாடி டவுனை சேர்ந்தவன் விஷ்ணு ஜாதவ் (8). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந் நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின் தந்தை அதில் இருந்து விடுபட, போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான மருந்து  பயன்படுத்தி வந்தார். இந் நிலையில் அந்த மருந்தை தான் சாப்பிடுவதற்காக மிளகாய் பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தை தடவி வைத்து இருந்தார்.

மருந்து தடவிய மிளகாய் பஜ்ஜியை, விஷ்ணு சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் விஷ்ணு இறந்து விட்டான்.

இந்த சம்பவம் குறித்து வாடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருந்து தடவிய பஜ்ஜியை தவறுதலாக சாப்பிட்டதால் விஷ்ணு இறந்தது தெரியவந்துள்ளது. இச் சம்பவம் குறித்து வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #The Boy #Ate the drug #The boy death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story