×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுடுகாட்டில் சடலத்திற்கு தீவைக்க முயன்ற நேரத்தில் திடீரென கண் விழித்த நபர்.! அதிர்ச்சி வீடியோ.!

சுடுகாட்டில் சடலத்திற்கு தீவைக்க முயன்ற நேரத்தில் திடீரென கண் விழித்த நபர்.! அதிர்ச்சி வீடியோ.!

Advertisement


டெல்லி நரேலாவில் 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தாக கூறி குடும்பத்தினர் உறவினர்களுடன் சேர்ந்து அவரின் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். 

அப்போது சதீஷ் உடல் மீது போர்த்தப்பட்ட போர்வையை எடுத்துவிட்டு அவரது உடலுக்கு தீ வைக்க முயற்சித்த சமயத்தில் சதீஷ் திடீரென கண் விழித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதி, மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே சதீஷ் குடும்பத்தார் அவர் இறந்துவிட்டார் என நினைத்து இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்தது தெரியவந்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dead Man #funeral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story