×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்.! பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.!

அதிர்ச்சி.. கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்.! பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.!

Advertisement

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் களமசேரி பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத்தளத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி காலை 9 மணியளவில் திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் லிபினா என்ற 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத வழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக் கூறி திருச்சூர் மாவட்டம் கொடக்கரா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார்.

  

இந்த நிலையில் களமச்சேரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மலையத்தூரை சேர்ந்த பிரவீன் பிரதீப் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #KERALA #bomb plast
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story