×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகளை மனைவியாக்க முயன்ற மாமனார்! பொறுத்திருந்து இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்.

Daughter in law killed husband father and mother

Advertisement

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜம்பகிகேடி பகுதையைச் சேர்ந்தவர் சித்தராய மல்லேஷ்வரா. இவரது மனைவி கலாவதி. இவர்களது மகனுக்கும் கீதா என்ற பெண்ணிற்கும் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மகனுக்கு திருமணம் முடிந்த நாளில் இருந்தே சித்தராய தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் கீதாவின் கணவன் வெளியே சென்றிருந்த போது கீதா உடை மாற்றுவதை சித்தராய மறைந்திருந்து பார்த்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் திடீரென அறையினுள் வந்த சித்தராய மருமகளை கட்டி பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் பற்றி மருமகள் தனது மகனிடம் எதையும் கூறாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சித்தராய தனது மருமகளுக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சித்தராய எல்லையை மீறி தனது மருமகளை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த கீதா அருகில் இருந்த கம்பியை எடுத்து சித்தராய மட்டையில் அடித்துள்ளார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு சித்தராயவின் மனைவி வர அவரையும் இரும்பு கம்பியால் அடித்துள்ளார் கீதா. இதில் அவர்கள் இருவரும் உயிர் இழந்துவிட்ட இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார் கீதாவை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story