×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொடுமையின் உச்சம்.! வயதான மாமனாரை ஈவு, இரக்கமின்றி தாக்கி கீழே தள்ளிய மருமகள்.! பகீர் வீடியோ!!

கொடுமையின் உச்சம்.! வயதான மாமனாரை ஈவு, இரக்கமின்றி தாக்கி கீழே தள்ளிய மருமகள்.! பகீர் வீடியோ!!

Advertisement

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள குல்சேகர் பகுதியில் வசித்து வருபவர் 87 வயது நிறைந்த பத்மநாப சுவர்ணா. இவரது மருமகள் உமா சங்கரி. மங்களூர் நகரில் மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருமகள் உமாசங்கரி மாமனாரை அவர் நடக்க பயன்படுத்தும் இரும்பு வாக்கிங் ஸ்டிக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்த சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், மருமகள் உமாசங்கரி மிகுந்த கோபத்துடன் மாமனாரிடமிருந்து வாக்கிங் ஸ்டிக்கை பறித்து அவரை கடுமையாக அடித்துள்ளார். வலி தாங்க முடியாத அந்த வயதான முதியவர் அடிக்க வேண்டாம் என கெஞ்சியவாறு அந்த ஸ்டிக்கை வாங்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது வாக்குவாதம் செய்தவாறே உமாசங்கரி அவரை பிடித்து கீழே தள்ளியுள்ளார். 

பின்னர் மீண்டும் மாமனாரை அடிக்க ஸ்டிக்கை எடுத்த உமாசங்கரி பின்னர் அடிக்காமல் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் உமாசங்கரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தாக்கப்பட்ட முதியவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #attack #Daughter in law
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story