×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய தாயின் கடைசி ஆசை.! ஐசியுவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்.! வைரல் வீடியோ!!

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய தாயின் கடைசி ஆசை.! ஐசியுவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்.! வைரல் வீடியோ!!

Advertisement

பீகார் மாநிலம் பாலி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்க்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த சில காலங்களாக பூனம் வர்மா இதய நோயால் பாதிக்கபட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு உடல்நலம் மோசமடைந்துள்ளது. அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பூனம் வர்மா ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் எப்பொழுது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பூனம் வர்மா தான் இறப்பதற்கு முன் கடைசி ஆசையாக மகளது திருமணத்தை பார்க்க வேண்டும் என குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஐசியுவில் பூனம் வர்மா கண்முன்னே சாந்தினி குமாரிக்கு ஏற்கனவே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் தொடர்ந்து சில மணிநேரத்திலேயே பூனம் வர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #ICU #last wish
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story