தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா பாதித்ததாக நினைத்து கணவன் - மனைவி தீக்குளித்து தற்கொலை.! சிக்கிய கடிதம்.!

Couples suicide in andhra due to corono fear

Couples suicide in andhra due to corono fear Advertisement

தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நினைத்து கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருக்கும் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வெங்கட லட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சதீஷ் ஆட்டோ ஓட்டி தங்கள் வாழ்க்கையை நகர்த்திவந்துள்ளனர். மேலும், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.

corono

சதீஷின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையியல், டயாலிசிஸ் மூலம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்தான் இன்று காலை கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ள காலி இடத்தில், தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், தங்களுக்கு கொரானா ஏற்பட்டு உடல்நிலை மோசமாகிவிட்டது. எனவே வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கணவன் - மனைவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story