×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய இளம்ஜோடி! வெளியான பகீர் சம்பவம்!

Couple commit suicide with two babies

Advertisement

புனே சுஹ்சாகர் பகுதியில் வசித்து வந்தவர் அதுல் ஷிண்டே. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ருக்வித் என்ற ஆறு வயது மகனும், அந்தரா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதுல் ஷிண்டேவின் நண்பர் ஒருவர் அவருக்கு  போன் செய்துள்ளார்.  ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை

இந்நிலையில் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு குழந்தைகள் உட்பட கணவன்-மனைவி அனைவரும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் அங்கு சுவற்றில், எங்கள் தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. எங்களது சூழ்நிலையே காரணம் என எழுதப்பட்டிருந்தது.

பின்னர் போலீஸார் நான்கு பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதுல் ஷிண்டே பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கொரோனா பரவலால் அது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வருமானமின்றி நிதி நெருக்கடியில் அவர்கள் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #family #Pune
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story