வீட்டின் உள்ளே நிர்வாணமாக இறந்து கிடந்த தம்பதியினர்.! கடிதத்தில் எழுதியிருந்த மனதை உருக்கும் கடைசி வரிகள்!!
couple commit suicide for not having baby
தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆர்.ஜெயபாலன் மற்றும் மாலினி தம்பதியினர். ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில் ஜெயபாலன் மனையிடம் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
மேலும் இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆனநிலையில் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் ,இகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இரு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டின் உள்ளிருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெயபாலனும், மாலினியும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களது சடலத்தை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் சோதனையிட்டபோது கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொலை செய்துகொண்டோம்.தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது இந்த முடிவுக்காக பெற்றோர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362