×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

இந்தியாவில் சமீப காலமாக குறைந்துவந்த கொரோனா பரவல் நேற்றய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 13,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று 15,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,10,883 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,869 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #increased
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story