இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு..! கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,408 ஆக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,408 பேருக்கு கொரோனா உறுதியானதால், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 08 லட்சத்து 02 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் 10 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,853 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,96,308 ஆக உள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,54,823 ஆக அதிகரித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362