கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் இத்தனை பேர் பலியா.? அச்சத்தில் மக்கள்!
corona death increased in india
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1007 -பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,61,191 -ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48,040 - ஆக உள்ளது.
.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 2,06,24,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 7,49,421 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1,28,31,800 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362