×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த அதிர்ச்சி.. கொரோனா 3 வது அலை குறித்து வெளியான முக்கிய தகவல்..!! அச்சத்தில் மக்கள்..

தற்போதிருக்கும் கரோனா தொற்று செப்டம்பரில் மேலும் அதிதீவிரமாக உருமாற்றம் அடைந்தால், நாட்டில

Advertisement

தற்போதுள்ள  கொரோனா பாதிப்பு வரும் செப்டம்பரில் உருமாற்றம் அடைந்தாள் கொரோனா 3 வது அலை இந்தியாவில் தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 2 வது அலை இந்தியாவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாள்தோறும் தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆயிர கணக்கான மக்கள் உயிரிழந்துவந்தனர்.

இந்நிலையில் தற்போதுதான் கொரோனா 2 வது அலை பாதிப்பு நாடு முழுவதும் சற்று குறைய தொடங்கி, பள்ளி  மீண்டும் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா 3 வது அலை பாதிப்பு உச்சத்தை தொடலாம் என நிபுணர்கள் ஏற்கனவே கூறியிருந்தநிலையில், தற்போதிருக்கும் கொரோனா தொற்று செப்டம்பரில் மேலும் அதிதீவிரமாக உருமாற்றம் அடைந்தால், நாட்டில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே மூன்றாம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதனால் கொரோனா 3 வது அலை குறித்த அச்சம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamil nadu #Corona 3rd wave
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story