மாணவர்களின் பையில் ஆணுறை, போதை பொருள், சிகரெட்!.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்..!!
மாணவர்களின் பையில் ஆணுறை, போதை பொருள், சிகரெட்!.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்..!!
பெங்களூருவில் பள்ளி மாணவர்களின் பைகளில் போதைபொருள், ஆணுறை, சிகரெட் லைட்டர்கள், இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. எனவே ஆரம்பம் மற்றும் மேல்நிலைப்பள்ளி கூட்டமைப்பு, மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருகிறார்களா என சோதனை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பைகளில் செல்போன்கள், ஆணுறைகள், சிகரெடுகள், லைட்டர்கள், போதைப்பொருள் போன்றவை இருந்தன. ஒரு மாணவியின் பையில் இருந்து கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை கண்டெடுக்கப்பட்டது.
இதுபற்றி அந்த மாணவியிடம் கேட்டபோது அவள் தனது நண்பர்கள் தனக்கு தெரியாமல் ஆணுறைகளை பையில் போட்டதாக கூறினார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து அவர்கள் தவறான வழியில் செல்வது பற்றி கூறினர்.
இதத கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரிடம் ஆசிரியர்கள், மாணவர்களை கவுன்சிலிங் அழைத்து செல்லும்படி பெற்றோருக்கு, அறிவுறுத்தினர். இந்நிலையில் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் பத்து நாட்கள் விடுமுறை அளித்துள்ளன.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362