×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர் காதல் தொல்லை... கல்லூரி மாணவி தற்கொலை.!! பயிற்சியாளர் தலைமறைவு.!!

தொடர் காதல் தொல்லை... கல்லூரி மாணவி தற்கொலை.!! பயிற்சியாளர் தலைமறைவு.!!

Advertisement

தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சியாளரின் அத்துமீறலால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை தலைமறைவாக இருக்கும் பயிற்சியாளரை தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அம்பாஜி என்ற நபர் கல்லூரியொன்றில் கைப்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் மவுலி என்ற பெண் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். பயிற்சியாளர் அம்பாஜி கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி இருக்கிறார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும் அவர் மாணவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மாணவியின் இறப்பிற்கு காரணமான பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைப்பந்து பயிற்சியாளரின் தொந்தரவால் கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!

இதையும் படிங்க: கல்யாணம் முடிந்த 6 மாதத்தில் சோகம்... நிராகரித்த கணவன்.!! மனைவி எடுத்த விபரீத முடிவு.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Telengana #Crime #love torture #student suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story