×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரு தரப்பினரிடையே உண்டான மோதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்...!!

இரு தரப்பினரிடையே உண்டான மோதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்...!!

Advertisement

இரு தரப்பினரிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் வங்காளதேசத்தில் எட்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தில் உள்ள பந்தர்பனில் இருக்கும் கம்டாங் பாரா பகுதியில் சாலை ஓரமாக பலர் பிணமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 8 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த எட்டு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இரு தரப்பினரிடையே உண்டான மோதல் துப்பாக்கி சண்டையில் முடிந்ததும், அதில் எட்டு பேர் பலியானதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரியவராத நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #bangladesh #Gunfight #8 People Killed in Firing
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story