ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்...!!
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்...!!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு படையினர் இன்று காலை 7.30 மணியளவில் ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது, திடீரென லாரிக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர். இதை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362