பெற்றோர்களே கவனம்.! உயிரே போய்விடும்!! வெளியான நெஞ்சை உருக்கும் பகீர் சம்பவம்!!
children dead inside car
புல்தானா மாவட்டம் கவாலிபுரா பகுதியில் வசித்து வந்த 5 வயது ஆதில் சேக் ஜமீல், 3 வயது ஆசிம் சேக் மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் ஆகியோர் சமீபத்தில் வீட்டின் அருகே பார்க்கிங்கில் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது விளையாட்டுத்தனமாக அனைவரும் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றி ஏறியுள்ளனர்.
ஆனால் அதன்பின் அவர்களால் கார் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. இதனால் 3 பேரும் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனைவரும் மயக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு வரை குழந்தைகளை காணாததால் பதறிப்போன பெற்றோர்கள் குழந்தைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர் . அதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மறுநாள் பேச்சு மூச்சின்றி காருக்குள் கிடந்த 3 பேரையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காருக்குள் இருந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் 5 வயது சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362