×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 பேர் கும்பலால் குழந்தைகள் கண்முன் தாய் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கதறிய பிஞ்சுகள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

3 பேர் கும்பலால் குழந்தைகள் கண்முன் தாய் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கதறிய பிஞ்சுகள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

 

குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்ணுக்கு உதவுவதாக நடித்து இழைத்த கொடுமை நெஞ்சை பதறவைத்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மர்வாஹி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தினக்கூலியாக வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று இவர் தனது குழந்தைகளுடன் நடந்துகொண்டு இருந்தபோது, அங்கு காரில் வந்த 3 பேர் லிப்ட் கொடுப்பதாக கூறி இருக்கின்றனர். இதனை நம்பிய பெண்மணி குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு சென்றுள்ளார். 

இந்த கும்பல் இவர்களை காரில் கடத்தி சென்று, அங்குள்ள வனப்பகுதியில் வைத்து குழந்தைகள் முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. குழந்தைகள் கண்முன் கூட்டுப்பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது. தன்னை விட்டுவிடுமாறு பெண் கதறியும் பலன் இல்லை. 

பெண்ணின் குழந்தைகளுக்கு 4 வயது முதல் 6 வயது வரை ஆவதால், அவர்களால் தாய்க்கு உதவ இயலவில்லை. தாயை விட்டுவிடுமாறு கும்பலிடம் அழுது மன்றாடி இருக்கின்றனர். 

கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றிய கும்பல் அவர்களை நகர்ப்பகுதியில் விட்டு சென்றுள்ளது. அங்கிருந்து காவல் நிலையம் சென்ற பெண்மணி அளித்த புகாரின் பேரில் தினேஷ் சந்திரா (வயது 30), பிரதீப் சந்திரா (வயது 33), தரசண்ட் (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chhattisgarh #India #gang rape #mother #police #கூட்டுப்பாலியல் பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story