#JustIN: சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் அகால மரணம்.. கண்ணீரில் தொண்டர்கள்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்.!
#JustIN: சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் அகால மரணம்.. கண்ணீரில் தொண்டர்கள்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்.!
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் காலமானார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் சின்ஹா மந்தவி பணியாற்றி வருகிறார்.
இவர் கன்கீர் மாவட்டத்தில் உள்ள பானு பிரதாபூர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 58 வயதாகும் மந்தவிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர் தம்தரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனோஜ் சின்ஹா இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரது மறைவு அம்மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362