×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகன் முகத்தை கடைசியாக பார்த்துக்கிறேன்! இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கதறி அழுத மத்திய மந்திரியின் தாய்.!

central minister mom crying for her son death

Advertisement

இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு கடந்த 11ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார். 

சுரேஷ் அங்கடி மரணம் அடைந்த செய்தியை கேட்டதும் அவரது தாய் சோமவ்வா கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லியில் சுரேஷ் அங்கடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சுரேஷ் அங்கடியின் மகள் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.

அப்போது சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு தானும் வருவதாக, சோமவ் கெஞ்சியுள்ளார், ஆனால் அவருக்கு வயதாகி விட்டதால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தனது மகனின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று கதறி அழுதார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வருன்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #central minister
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story