இந்தியர்களுக்கு உற்சாக செய்தி... இனி எல்லாரும் பறக்கலாம் - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
இந்தியர்களுக்கு உற்சாக செய்தி... இனி எல்லாரும் பறக்கலாம் - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலைபோக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பறக்கும் பேருந்து விரைவில் இந்தியாவில் வரும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "டெல்லி மற்றும் அண்டை மாநிலத்தில் போக்குவரத்து மாசுக்கட்டுப்பாடை குறைக்க வழிவகை செய்து வருகிறோம். டீசல் பேருந்துகள் காரணமாக மாசுபாடு அதிகரிக்கிறது. இந்தியாவில் பறக்கும் பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
பறக்கும் பேருந்துகள் மெட்ரோ இரயில் போன்ற போக்குவரத்து அமைப்பு ஆகும். இது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். முதல் வழித்தடமாக டெல்லி - அரியானா பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியாவின் பெருநகரத்தில் பறக்கும் பேருந்து திட்டம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362