×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுவனின் அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை செய்த கொடூரம்!. போலீசார் விசாரணை..!!

சிறுவனின் அந்தரங்க உறுப்பை அறுத்து... கொலை செய்த கொடூரம் போலீசார் விசாரணை..!!

Advertisement

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலியாகப் வோலை செய்து வருகிறார்.

பங்கஜ் தாமோர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது;- செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறுவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளான். வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சிறுவனின் பெற்றோர் வேலை செய்யும் பண்ணை அருகில் சிறுவனின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். அங்கு சிறுவனின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது. அங்கு சிறுவனின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த போது, கரும்பு வெட்டப் பயன்படுத்திய பில் கொக்கியை வைத்து சிறுவனின் தலையை தாக்கியியுள்ளனர். மேலும் சிறுவனின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gujarat #Jamnagar District #murder case #police investigation #young boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story