×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த கையோடு மணமகள் செய்த அதிர்ச்சி காரியம்! கைகொடுத்த கணவர்!

Bride wrote exam after completing her marriage in karnataka

Advertisement

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன்(25) என்ற வாலிபருக்கு, சுவேதா(20) என்ற இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக திருமண நாள் அன்று மணமகள் சுவேதாவுக்கு இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்றுள்ளது.

பி.காம் இறுதி ஆண்டு படித்துவரும் சுவேதாவுக்கு திருமண நாளான நவம்பர் 18 அன்று இறுதி தேர்வு நடந்துள்ளது. மணநாள் முன்னதாகவே நிச்சயிக்கப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளார் சுவேதா.

இதுகுறித்து தனது வருங்கால கணவரிடம் தெரிவித்தார். நவீன் சுவேதாவிடம் ஏன் இதற்கு பயப்படுகிறாய், கல்யாணம் முடிந்ததும் நீ போய் தேர்வு எழுதலாம் என ஆறுதல் கூறியுள்ளார். ஸ்வேதாவிற்கு ஒரு பக்கம் பயம் இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நவீன் அவரது மனைவியை அழைத்துக்கொடு திருமண கோலத்துடன் தேர்வு எழுதும் அறைக்கு வந்துள்ளார். பின்னர் தனது இறுதி ஆண்டு தேர்வை சிறப்பாகா எழுதியதாகவும், இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த கணவருக்கும், சொந்தபந்தங்களுக்கும் நெற்றி தெரிவித்தார் சுவேதா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bride wrote exam after wedding #karnataka
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story