×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலி பிரிந்து சென்றதால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்!

காதலி பிரிந்து சென்றதால் காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்!

Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள நஞ்சபுரா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வர, அவர்கள் அந்த பெண்ணை அவருக்கு மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர்கள் ஹர்ஷித்தின் காதலியைத் தான் திருமணம் செய்ய போவதாகவும், அவளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் விரட்டியுள்ளனர். இதனிடையே அந்தப் பெண்ணும், ஹர்ஷித்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஹர்ஷித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கையை அறுத்து, அதனை புகைப்படம் எடுத்து தனது காதலை மற்றும் அவரது பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து ஹர்ஷித்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஹர்ஷித்தின் காதலி, இல்ல என் பையன் அவரது பெற்றோர் மற்றும் அத்தை கவிதா, மாமா உன்னிடம் நிறைய வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#breakup #Love couples #Love problem #suicide #karnataka
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story