×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கழிப்பறையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்: காவல்துறையினர் விசாரணை..!

கழிப்பறையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்: காவல்துறையினர் விசாரணை..!

Advertisement

டெல்லியில் உள்ள பொது கழிப்பறையில் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியின் ஷஹ்தராவில் ஜில்மில் தொழிற்சாலை பகுதியில் இருக்கும் பொதுக் கழிப்பறையில் இருந்து மூன்று வயது சிறுவனின் சடலம் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடல் பொது கழிப்பறையில் கிடப்பது குறித்து காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து குழந்தையின் சடலத்தின் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை, பிஸ்கட் பாக்கெட், பணம் போன்றவற்றை கண்டெடுத்தனர். குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பி வைத்தனர். 

ஷஹ்தரா துணை  கமிஷனர் இதுகுறித்து கூறும்போது, குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும், குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. கழுத்தை நெரித்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. உடற்கூறு ஆய்வின் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Body of baby #delhi #3 Years old Child #police investigation #toilet
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story