×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண் மருத்துவர்கள் கொலைவழக்கில் குற்றவாளிகளின் உடல்கள் குறித்து வெளியான பகீர் தகவல்! மருத்துவர்கள் அச்சம்!

Bodies of accused in Disha case may decompose

Advertisement

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து செல்லும்போது போலீசார் அவர்களை சுட்டு கொன்றனர். இதனை அடுத்து கொலையாளிகள் நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காந்தி மருத்துவமனையில் வகைப்பட்டுள்ளது.

இதுவரை நால்வரின் உடல்களும் அடக்கம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களில் நான்கு உடல்களும் அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால் குளிரூட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க முடியும் என்றும், உடலை அறுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு விட்டதால் அப்படி செய்ய முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் embalming செய்து உடலை பாதுகாக்க முடியும். ஆனால், எம்பளமிங் செய்த பின்னர் மீண்டும் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்தால் இரண்டு முடிவுகளும் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Disha #Doctor murder case
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story