பசு மாட்டு சிறுநீரை குடித்ததால் கொரோனாவில் இருந்து தப்பித்தேன்.! வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க எம்எல்ஏ !
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படுவேகமாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் நா
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் படுவேகமாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவருகின்றனர். உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், பசுவின் சிறுநீரை குடித்து வருவதால், நான் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் பசுவின் சிறுநீரை எப்படி குடிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில், "தினமும் காலையில் பல் துலக்கிய பின்னர், வெறும் வயிற்றில் பசுவின் சிறுநீர் 5 மூடி அளவிற்கு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன். வெறும் வயிற்றில் தான் சிறுநீர் கலவையை குடிக்க வேண்டும். கொரோனா நோயை மட்டுமின்றி, இதய நோய்களையும் குணப்படுத்த பசுவின் சிறுநீர் உதவும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362