×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.! பாராட்டிய பில்கேட்ஸ்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பேசியுள்ளார். அவர் கூறுகையில், எதிர்காலத்தில் எந்தவொரு தொற்றுநோயையும் திறம்பட சமாளிக்க தடுப்பூசி தளங்களை உருவாக்குவது அவசியம் என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் முக்கிய பங்கு வகிக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா தனது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும். பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது . பிரதமர் மோடிக்கு அவரது ட்விட்டர் பதிவில் நன்றி கூறியுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bill Gates #India #modi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story