அய்யோ... கடவுளே! காது வலிக்குதுன்னு போயி கடைசியில் கையை இழந்த சோகம்...! மருத்துவர்களின் அலட்சியத்தால் வாழ்க்கையை இழந்து துடிக்கும் இளம்பெண்...! அதிர்ச்சி வீடியோ...!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் காது வலிக்கு சிகிச்சை பெற்ற 20 வயது இளம்பெண்ணின் கை, தவறான ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் முழங்கை வரை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் காது வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற 20 வயது இளம்பெண்ணின் கை முழங்கை வரை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காது வலிக்கு சென்ற சிகிச்சை விபரீதம்
பாட்னாவைச் சேர்ந்த ரேகா என்ற இளம்பெண், கடுமையான காது வலிக்காக அங்குள்ள மகாவீர் சுகாதார நிறுவனத்தில் சிகிச்சை பெறச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவர்கள் தவறான ஊசியை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் சில நிமிடங்களிலேயே அவரது கை பச்சை நிறமாக மாறியதுடன், தாங்க முடியாத வலியும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 2 வருஷமா ஒரே டார்ச்சல்... 2 மாதமாக போட்ட பலே திட்டத்தால் தீட்டிய கத்தி! ஆசிரியை படுகொலையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!!
அந்த நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தேவையான கவனிப்பின்றி அவரை அனுப்பிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வலி அதிகரித்த ரேகா, அடுத்தடுத்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
கையை அகற்ற வேண்டிய நிலை
இறுதியாக அவர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தவறான சிகிச்சையால் கை கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது உயிரைக் காப்பாற்றும் நோக்கில், வேறு வழியின்றி முழங்கை வரை கை துண்டிப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழ்க்கையே மாறிவிட்டதாக வேதனை
சாதாரண காது வலிக்காக மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், மருத்துவ அலட்சியம் காரணமாக தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டதாக ரேகா வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அவரது திருமண ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளம் பெண்ணின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: "நான் அனாதை" அனுதாபத்தை நம்பி மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர்.. செல்போனில் அம்பலமான அந்தரங்க உண்மை.!