×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தோழிக்கு காதல் தோல்வி.. 6 சிறுமிகள் விஷம் குறித்து தற்கொலை முயற்சி.. 3 பேர் பரிதாப பலி.! இப்படியும் நட்பு??..!!

தோழிக்கு காதல் தோல்வி.. 6 சிறுமிகள் விஷம் குறித்து தற்கொலை முயற்சி.. 3 பேர் பரிதாப பலி.! இப்படியும் நட்பு??..!!

Advertisement

உயிருக்கு உயிராக பழகி வந்த 6 சிறுமிகளில் ஒருவருக்கு காதல் தோல்வி ஏற்பட, 6 பேரும் சேர்ந்து விஷம் குறித்து தற்கொலை முயற்சி செய்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டம், காஸ்மா பகுதியில் 6 சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆறுபேரும் இணைபிரியா தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த 6 பேரில் பெண்ணுக்கு 18 வயது ஆகிறது. இவருக்கும், அவரின் உறவினருக்கும் இடையே காதல் இருந்துள்ளது. 

ஆனால், இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தெரியவருகிறது. இதனால் பெண்மணி மன உளைச்சலில் இருந்த நிலையில், அவர் தற்கொலை முடிவு எடுத்ததாக தெரியவருகிறது. இதனையடுத்து, தனது தற்கொலை விவகாரத்தை தோழிகளிடம் தெரிவிக்க, அனைவரும் சேர்ந்தே தற்கொலை செய்யலாம் என்ற விபரீதம் முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தோழிகள் 6 பேரும் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், இவர்கள் மைதானம் அருகே விஷம் குறித்து உயிருக்கு போராடியதால், மக்கள் ஏதேனும் விசக்காயை விபரம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள் என நினைத்து மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சையின் போதே அடுத்தடுத்து 3 சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அவசர நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வந்த பெண்ணிடம் விசாரணை செய்கையில் விபரம் புரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 சிறுமிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #Aurangabad #India #suicide #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story