×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து தப்பிய சிறுமி.. பரபரப்பு சம்பவம்.!

3 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து தப்பிய சிறுமி.. பரபரப்பு சம்பவம்.!

Advertisement

ரிக்சா ஓட்டுநர் உட்பட 3 பேரால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி கும்பலிடம் இருந்து தப்பிக்க கீழே குதித்து பொதுமக்களால் மீட்கப்பட்டது நடந்துள்ளது.  

பீகார் மாநிலத்தில் உள்ள ஆரா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த மார்ச் 31 ஆம் தேதி இ-ரிக்சாவில் அங்குள்ள பஜார் பகுதிக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ரிக்ஷவை இயக்கியவர், தனது நண்பர்கள் 2 பேரை இருசக்கர வாகனத்துடன் பின்னால் வரச்சொல்லியுள்ளார். 

சிறுமி பயணித்த ரிக்சா ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், ரிக்சாவை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேருடன் ரிக்சா ஓட்டுநர் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரை கத்தி முனையில் மிரட்டி அதே ரிக்சாவில் எங்கோ அழைத்து சென்றுள்ளனர். 

இதனால் சுதாரித்த சிறுமி அலறிக்கூச்சலிட்டவாறு, ஓடும் ரிக்சாவில் இருந்து கீழே விழுந்து தப்பித்துள்ளார். உடலில் காயத்துடன் உயிருக்கு போராடிய சிறுமியை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆரா காவல் துறையினர், சிறுமியிடம் மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்தியபோது கூட்டுப்பாலியல் பலாத்கார சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ரிக்சா ஓட்டுநர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #Arrah #Minor Girl #sexual abuse #police #Investigation #India #gang rape
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story