×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை தொடங்குகிறது பிரம்மாண்ட திருவிழா.. மக்களே தவறவிடாதீர்கள்.!

நாளை தொடங்குகிறது பிரம்மாண்ட திருவிழா.. மக்களே தவறவிடாதீர்கள்.!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பசவனக்குடி தொட்ட கணபதி கோவிலில் வருடம்தோறும் கடலைகாய் திருவிழா நடைபெறும். கடலைக்காய் திருவிழா அம்மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா காரணமாக கடலைக்காய் திருவிழா நடக்கவில்லை. 

தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருப்பதன் காரணமாக நாளை திங்கட்கிழமை (29/11/2021) அன்று கடலைக்காய் திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழாவை பெங்களூர் மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பல கடலைக்காய் வியாபாரிகளும் பசவனக்குடிக்கு வந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கவுரவ் குப்தா தெரிவிக்கையில், "கடலைக்காய் திருவிழா நவ.29 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான தயார் நிலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பலத்த காவல்துறை ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது. 3 நாட்கள் பசவனக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #karnataka #Basavanagudi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story