×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாக்., சீமாவை போல சர்ச்சையை கிளப்பும் பங்களாதேஷ் ஜூலி; எல்லைதாண்டிய பேஸ்புக் காதல் செய்த அடுத்த சர்ச்சை.!

பாக்., சீமாவை போல சர்ச்சையை கிளப்பும் பங்களாதேஷ் ஜூலி; எல்லைதாண்டிய பேஸ்புக் காதல் செய்த அடுத்த சர்ச்சை.!

Advertisement

 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா கைதர் என்ற பெண்மணி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவை சார்ந்த சச்சின் என்ற இளைஞருடன் பப்ஜி மூலமாக காதல் வளர்த்து, தற்போது சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தனது காதலரை கரம் பிடித்தார். 

நான்கு குழந்தைகளுடன் சச்சினை கரம் பிடித்த சீமா கைதர், எனது கணவர் இந்தியர் நான் இந்து என்று கூறி தற்போது பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் உளவு பிரிவை சார்ந்த பெண்மணி என்று கூறி, அவரை பாகிஸ்தானில் கொண்டு விட ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது.

சீமா ஹைதர் - சச்சின் ஜோடி

மற்றொருபுரத்தில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள், இந்தியா சீமாவை பாகிஸ்தானிடம் ஒப்படைக்காத பட்சத்தில் பல தாக்குதல்கள் நடைபெறும் என்று கூறி பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை தாக்கி வருகின்றது. 

இந்த நிலையில், பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த பெண்மணி ஜூலி என்பவர், உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை முகநூலில் காதலித்ததாகவும், அவரை கரம்பிடித்து தனது 11 வயது குழந்தையுடன் வசித்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த உண்மை அஜய்யின் குடும்பத்தினருக்கு தெரியாத நிலையில், தற்போது ஜூலியின் பாஸ்போர்ட் காலாவதி தேதி வருவதால், அதனை நிறைவு செய்ய வங்கதேசம் செல்லவேண்டி இருந்துள்ளது. இந்த உண்மையை அறிந்த அஜய்யின் தாய் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangladesh #India #Facebook #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story