×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் குடும்பத்தினர்!

தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் குடும்பத்தினர்!

Advertisement

பெங்களூரில் தாயின் கண் முன்னே மகன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ரூரல் ககலிபுரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவை விற்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவிக்குமார் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த 4 பேர் ரவிக்குமார் எங்கே என்று அவரது தாயிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அந்த நேரத்தில் ரவிக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் நான்கு பேரும் ரவிக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிக்குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனிடையே தன் கண் முன்னே மகன் குத்தி கொல்லப்பட்டதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்து கத்தி கதறி உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #bangalore #killed #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story