×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணிமைக்கும் நொடியில் பச்சிளங்குழந்தையின் உயிரைப் பறித்த தந்தை! மனவேதனையில் கதறித் துடிக்கும் துயரம்!

Baby girl dies after being left inside car by father

Advertisement

ஹைதராபாத் சந்திரயங்குட்டாவின்   பார்காஸ் பகுதியை சேர்ந்தவர் கலீத் சாரி.  28 வயது நிறைந்த இவர் வாகன ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ஹீரா காரின் முன்பு நின்று விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. 

இதை அறியாத கலித் காரை எடுத்து ஓட்ட துவங்கியுள்ளார். அப்பொழுது குழந்தை மீது கார் ஏறி இறங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தை மீது கார் ஏறியதை உணர்ந்த கலித் உடனே கதறியவாறு காரை விட்டு இறங்கி குழந்தையை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். 

ஆனால் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் கலீத் தன்னால்தான் குழந்தை இறந்தது, தான்தான் குழந்தையை கொன்றுவிட்டேன் என்று மிகுந்த வேதனையில் துடிதுடித்துள்ளார். மேலும் கவனக்குறைவால் உயிர் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக போலீசார் கலீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#car #baby #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story