மகிழ்ச்சியான செய்தி! கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்து! மருந்தை வெளியிட்ட பதஞ்சலி!
ayurvedic medicine for corona
உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனாலும் இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து எந்த நாட்டிலும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் இந்த கொடூர வைரஸான கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீடத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு கொரோனில்(Coronil) என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது. தங்களது சோதனையில் கொரோனா நோயாளிகளை இந்த மருந்து குணப்படுத்தியதாகவும் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், இந்த சோதனையின் போது 95 கொரோனா நோயாளிகள் பங்கேற்றனர். அதில், 3 நாட்களுக்குள் 69% நோயாளிகள் மீட்கப்பட்டன், 7 நாட்களுக்குள் 100% பேரும் நோய்தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362