ஆஞ்சநேயர் போல் காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்த ஆட்டோ டிரைவர்.. வைரலாகும் விநோத வீடியோ!
Auto driver flew in air hit women
பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரில் சிக்கி காற்றில் பறந்து வந்து நடந்து சென்ற பெண் மேல் விழுந்ததால் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி காலையில் ஹோட்டல் நடத்தி வரும் சுனிதா(42) என்ற பெண் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது திடீரென ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரை பிடித்தவாறு காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்துள்ளார்.
இதில் காயமடைந்த அந்த பெண்ணிற்கு 52 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த பெண், "எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது. திடீரென திரும்பி பார்த்தால் ஒருவர் ஆஞ்சநேயர் போல் காற்றில் பறந்து வந்தார்" என கூறியுள்ளார்.
இது எப்படி நடந்தது என்ற குழப்பத்தில் இருந்த அந்த பெண்ணிற்கு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பாதிவான வீடியோவை பார்த்த பின்பு தான் விஷயம் தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவில் சிக்கிய ஒயரை எடுத்துவிட முயன்றுள்ளார்.
அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த வாகனம் ஒன்று ஒயரை இழுத்தவாறு செல்லவே ஒயர் டிரைவரின் கால்களுக்கு இடையே மாட்டிக்கொண்டது. இதில் ட்ரைவர் ஒயர் மூலமாகவே காற்றில் பறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ஆட்டோ டிரைவர் நடந்து சென்ற சுனிதாவின் மேல் விழுந்துள்ளார். இதில் டிரைவருக்கு பெரிதாக காயம் எதுவும் இல்லையாம்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362