×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பில்லி சூனிய நம்பிக்கை! பரிதாபமாக உயிரிழந்த இரண்டு உயிர்கள்! அதிர்ச்சி சம்பவம்!

aunt killed young boy

Advertisement


மகாராஷ்டிரா மாநிலம் தாரோடி குர்த் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வசிக்கும் பகுதியில் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இரண்டுதினங்களுக்கு முன்பு ரத்னமலா மற்றும் அவரது மகள் சுபா ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ரத்னமலா அருணின் அத்தை என்பது தெரியவந்தது. 

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரத்னமாலாவின் சகோதரன் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். அடுத்த சில தினங்களில் ரத்னமாலாவின் மற்றொரு மகளும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் அருண் மற்றும் அவருடைய தாய் தனது தன்னுடைய குடும்பத்திற்கு பில்லி, சூனியம் வைப்பதால் தான் இவ்வாறு நடப்பதாக நினைத்து ரத்னமாலா அவர்களை பழிக்குப்பழி வாங்க முடிவு செய்தார்.

இதனையடுத்து ரத்னமாலாவின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தவரின் துணையுடன் அருணை கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ரத்னமாலாவின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story