×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ போச்சே!! 1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 45 லட்சம் தீயில் எரிந்து நாசமா போச்சே..!! ஏடிஎம் மையத்தில் நடந்த பகீர் சம்பவம்..

ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் எரிந்து ந

Advertisement

ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 45 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பமிடி என்ற பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையத்தில் நேற்று மதியம் 2.31 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஏடிஎம் மையம் தீ பிடித்து எரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் ஏடிஎம் மையம், ஏடிஎம் மெஷின் அதில் இருந்த பணம் ஆகிய அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

ஏடிஎம்மில் எரிந்து நாசமான பணம் மற்றும் பொருள்களின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 45 லட்சம் இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏடிஎம் மையத்திற்கு தீவைத்து, பணத்தை கொள்ளையடிக்க யாரும் திட்டமிட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ATM
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story