×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பள்ளிக்கு சென்றுவரும்போது நடந்த பயங்கரம்.!

15 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பள்ளிக்கு சென்றுவரும்போது நடந்த பயங்கரம்.!

Advertisement

 

பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பரா மாவட்டம், அகியா பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த அக். 1ம் தேதி சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு தனது அண்டை வீட்டில் வசிக்கும் மற்றொரு சிறுவனுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, சிறுமியை இடைமறித்த 3 பேர் கும்பல், அவரை தூக்கி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. கயவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில், அக்.3ம் தேதி அகியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பலாத்காரம் செய்த முகமத் ஆலம், அக்காஸ் அலி, அஜிபுல் ஹொயூ ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Assam #Goalpara #Minor Girl #Rape #India #அசாம் #கூட்டுப்பாலியல் பலாத்காரம் #பாலியல் வன்கொடுமை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story