×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. வீடுபுகுந்து துணிகர செயல்..! அதிர்ச்சி சம்பவம்.!!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்.. வீடுபுகுந்து துணிகர செயல்..! அதிர்ச்சி சம்பவம்.!!

Advertisement

பிறந்ததில் இருந்து பார்வைக்குறைபாடு உடைய பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர், கொண்டமிட்டா கிராமத்தை சேர்ந்த 32 வயது மாற்றுத்திறனாளி பெண்மணி, திசா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "எனக்கு பிறவியில் இருந்து பார்வை குறைபாடு உள்ளது. சித்தூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரா (வயது 42). இவர் கடந்த 1 வருடமாக எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். 

நேற்று முன்தினத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், என்னை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி சென்றார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் முரளி, ஜெய்சந்திரனை தேடி வந்துள்ளனர். 

இதனையடுத்து, அவரின் செல்போன் சிக்னலை வைத்து ஜெட்டிங் கொட்டாய் கிராமத்தில் பதுங்கியிருந்த ஜெய்சந்திரனை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பார்வைக்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andra Pradesh #India #Chittoor #Rape #sexual abuse #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story