×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிவேக பயணம்.. நொடியில் நடந்த விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப பலி.!

அதிவேக பயணம்.. நொடியில் நடந்த விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாப பலி.!

Advertisement

கால்வாய் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளான நிலையில், காரில் பயணித்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா - ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நாகர்ஜுனா சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் ஒரு ஆறு மாத பச்சிளம் குழந்தை என 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மேலும், சரக காவல் துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் ஐதராபாத் சந்தா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தார் என்பதும், மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கு செல்லும் வழியில் துயரம் நடந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andra Pradesh #India #accident #police #death #car #Highway
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story