நம்பி நெருக்கமாக பழகியவனிடம் ஏமாற்றம்! அந்த வலி தாங்க முடியல... அந்த போட்டோ லீக் பண்ணிடுவேன்னு மிரட்டல்! உள்ளங்கையில் அந்த வார்த்தையை எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை! பார்த்து பார்த்து கதறித்துடிக்கும் தந்தை!!!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இளம்பெண் மாதவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதாக குடும்பம் குற்றச்சாட்டு.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்யவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 24 வயது மாதவி, வீட்டிலேயே தூக்கிட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
உறவில் ஏற்பட்ட அதிர்ச்சி
பட்டப்படிப்பு முடித்த மாதவி, அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அந்த நேரத்தில் நாகூர் பாஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருப்பதும் மாதவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த உறவை முறித்துக்கொள்ள முயன்றார்.
மிரட்டலால் மன உளைச்சல்
இதையடுத்து ஆத்திரமடைந்த நாகூர் பாஷா, மாதவியை தொடர்ந்து தொடர்புகொண்டு மிரட்டியதாக தகவல். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறியதால், மாதவி கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளார். குடும்பத்தின் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில், அவர் இந்த பிரச்சினையை யாரிடமும் பகிர முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்! இவுங்க தான் என் மரணத்திற்கு காரணம்! திடீரென நர்சிங் மாணவி தற்கொலை!
உருக்கமான கடைசி குறிப்பு
தொல்லைகளைத் தாங்க முடியாமல் இறுதியில் மாதவி தற்கொலை முடிவை எடுத்தார். உயிரை மாய்ப்பதற்கு முன் தனது உள்ளங்கையில் “Take Care Papa” என்று எழுதி வைத்துச் சென்றது காணப்பட்டு, குடும்பத்தினரை உருக்கமாக்கியுள்ளது. தந்தையை பற்றிய கவலையுடன் அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
மாதவியின் மரணத்திற்கு நாகூர் பாஷாவே காரணம் என குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.