×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொள்ளைகட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ்.. இறந்த மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த தந்தை.!

கொள்ளைகட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ்.. இறந்த மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த தந்தை.!

Advertisement

தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்த மகளின் உடலை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு தந்தை கொண்டு வந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தப்பள்ளி பகுதியில் 2 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி பக்கத்து வீட்டு சிறுமிகளுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் முன்பே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்ற நிலையில், குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு தனியார் மருத்துவ ஊர்தியில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். 

ஆனால், தனியார் மருத்துவ ஊர்திக்கு அதிக கட்டணம் கேட்டதால், குழந்தையின் தந்தை தனது இருசக்கர வாகனத்திலேயே மருத்துவமனையிலிருந்து குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதால், குழந்தையை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தந்தை பைக்கிலேயே கொண்டுவந்தது குறித்து சமூக ஆர்வலர்கள் தனியார் மருத்துவமனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra #baby #dead #dad #ambulance
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story