×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமிதாப்பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக பரவும் தவறான செய்தி! கடுப்பில் அமிதாப்பச்சன் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

amitabh bachchan angry for fake news

Advertisement

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆகிய நால்வருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அமிதாப்பச்சன் மற்றும் அபிஷக் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர். பின்னர் அவர்களும் மூச்சு திணறல் அதிகமானதை அடுத்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு நெகடிவ் என்று வந்துள்ளது. அவர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று செய்திகள் வந்தது.

இந்த நிலையில் அதுத வறான செய்தி என்று அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நான் குணமாகிவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானது. போலியானது. பொறுப்பற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா மற்றும் ஆரத்யா ஆகிய நான்குபேரும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amitabh bachchan #corona #angry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story