×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.! அல்கொய்தா மிரட்டல்.!

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்.! அல்கொய்தா மிரட்டல்.!

Advertisement

பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்'  செய்து பாஜக உத்தரவிட்டது.

ஆனாலும் மத்திய பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், முகமது நபிகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அல்கொய்தா வெளியிட்ட கடிதத்தில், நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தாவின் இந்த மிரட்டல் கடிதம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்கொய்தா வெளியிட்ட இந்த கடிதத்தின் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Al Qaeda #suicide attack #warned
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story