இந்தியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்! 16 வீரர்கள் பலி!
again terrorist attack in idia
நேற்று மகாராஷ்டிர மாநிலம் கேட்சிரோலி பகுதியில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு பணிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்தவாகனம் மஹாராஷ்ர மாநிலத்திற்கும் சதீஸ்கர் மாநிலத்திற்கும் இடையேயான எல்லைபகுதியை எட்டியதும், நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் வாகனம் சிதறி 15 வீரர்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.
மேலும் படுகாயங்களுடன் பல வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர், இந்த தாக்குதல் நக்சலைட்டுகளால் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் குர்கேடா பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடந்த இடத்தில் 27 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீவைத்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மறைந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வேண்டிக் கொள்வதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362